பிரச்சாரத்தில் பங்கேற்று திரும்பிய போது சரக்கு வாகனம் கவிழ்ந்து 30 பேர் காயம் :

பிரச்சாரத்தில் பங்கேற்று திரும்பிய போது சரக்கு வாகனம் கவிழ்ந்து 30 பேர் காயம் :

Published on

சிவகங்கை அருகே முதல்வர் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு திரும்பிச் சென்றபோது சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்தனர்.

சிவகங்கையில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதனை ஆத ரித்து முதல்வர் பழனிசாமி நேற்று பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பதினெட்டான்கோட்டை கிராமத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பெண்கள் சரக்கு வாகனத்தில் சிவகங்கை வந்தனர். முதல்வர் பிரச்சாரம் முடிந்ததும், அதே சரக்கு வாகனத்தில் ஊருக்குத் திரும் பினர். பெரியகோட்டை அருகே சென்றபோது சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 30 பெண்கள் காயமடைந்தனர். அவர்களை அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பெண்களை சந்தித்து அமமுக வேட்பாளர் அன்பரசன் ஆறுதல் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in