Published : 11 Mar 2021 03:13 AM
Last Updated : 11 Mar 2021 03:13 AM

தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் எடுப்பு தொடர்பான - கருத்து கேட்பு கூட்டம் தள்ளிவைப்பு :

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் எடுப்பு தொடர்பாக நடைபெற இருந்த பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைய வுள்ள சென்னை-பெங்களூரு அதிவேக நெடுஞ்சாலை திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் பாணாவரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வரும் 13-ம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் மறு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x