Published : 06 Mar 2021 03:14 AM
Last Updated : 06 Mar 2021 03:14 AM

திண்டுக்கல் :

: திண்டுக்கல் அருகே காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழகத்தின் உதவிப் பதிவாளர் (வளர்ச்சி) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டியைச் சேர்ந்தவர் அடைக் கலம்(58). இவர் செட்டியபட்டி ரயில்வே கேட் அருகே நேற்று ரயில் வந்ததும் திடீரென அதன் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திண்டுக்கல் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x