Published : 15 Feb 2021 03:13 AM
Last Updated : 15 Feb 2021 03:13 AM

திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க முயன்ற 20 வீரர்கள் காயம் ஏ.வெள்ளோடு கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்து வந்த காளையை அடக்கிய வீரர்.

திண்டுக்கல் அருகே ஏ.வெள்ளோடு கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளைப் பிடிக்க முயன்ற 20-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர்.

ஏ.வெள்ளோடு கிராமத்தில் புனித சந்தியாகப்பர் கோயில் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதில் திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400 காளைகள் பங்கேற்றன.

ஜல்லிக்கட்டுப் போட்டியை திண்டுக்கல் கோட்டாட்சியர் உஷா தொடங்கி வைத்தார். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளிக்காசு, கட்டில், பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுகள் முட்டியதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x