Published : 10 Feb 2021 03:15 AM
Last Updated : 10 Feb 2021 03:15 AM

ஏப்ரல் 2 முதல் தேஜஸ் ரயில் திண்டுக்கல்லில் நின்று செல்லும் வேலுச்சாமி எம்.பி. தகவல்

திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி இந்து தமிழ் செய்தியாளரிடம் கூறியதாவது: திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ. அறிவுறுத் தலின்படி தேஜஸ் ரயிலை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல் திண்டுக்கல்-திருவனந்தபுரம் அமிர்தா எகஸ்பிரஸ் ரயிலை ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்லவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் சென்னை-மதுரை தேஜஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் உத்தரவு வழங்கியுள்ளது. ஏப்ரல் 2 முதல் இது அமலுக்கு வரும். இதேபோல அமிர்தா எக்ஸ்பிரஸ் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x