சூளகிரி ஊராட்சி ஒன்றிய மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.1.56 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்பட்ட சாலைப் பணிகளை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார்.
சூளகிரி ஊராட்சி ஒன்றிய மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.1.56 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்பட்ட சாலைப் பணிகளை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார்.

சூளகிரி ஒன்றியத்தில் ரூ.3.45 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் கிருஷ்ணகிரி ஆட்சியர் ஆய்வு

Published on

சூளகிரி ஒன்றியத்தில் ரூ.3.45 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத் துக்குட் பட்ட சூளகிரி, செம்பரசனப் பள்ளி, பெத்தசிகரப்பள்ளி, அங்கொண்டப்பள்ளி, அத்திமுகம், தொரப்பள்ளி, கன்னலட்டி, உத்தனப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, கொம்மேப்பள்ளி ஆகிய ஊராட்சி பகுதிகளில் ரூ.3.45 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார்.

சூளகிரி ஊராட்சியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட்ட சாலைப் பணிகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வளர்ச்சிப் பணிகள், முடிவுற்ற பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர், பணிகள் தரமாகவும், விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என அறிவுறுத்தினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in