Published : 18 Jan 2021 03:13 AM
Last Updated : 18 Jan 2021 03:13 AM

எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104-வது பிறந்தநாளையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் பகுதி, நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் கிளை இடங்களில் எம்ஜிஆரின் திருவுருவப் படத்துக்கு நேற்று மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

முன்னதாக, திருப்பூர் பூங்கா சாலையிலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை துணைத் தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்தார். இதைத்தொடர்ந்து கட்சிக் கொடியேற்றப்பட்டதுடன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), அதிமுக அமைப்பு செயலாளர்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சிவசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதேபோல, புறநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x