Published : 27 Dec 2020 03:15 AM
Last Updated : 27 Dec 2020 03:15 AM

ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி

திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்ச் சங்கம் திருப்பூர் மாவட்டக் கிளை இணைந்து ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வுபேரணியை நடத்தியது.திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, பல்லடம் சாலையில்உள்ள தமிழ்நாடு திரையரங்கம் வரை பேரணி நடந்தது.

தமிழ்ச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.புருசோத்தமன், கவுரவ ஆலோசகர் க.தங்கவேல், வரலாற்று ஆய்வாளர் சிவதாசன், தமிழ் வளர்ச்சித்துறை உதவியாளர் து.மணிமேகலை, மக்கள் மாமன்றம் வி.ஆனந்தகுமார், முத்துபாரதி, ரணதிவே உட்பட பலர் பங்கேற்றனர். கடைகள், தொழிற்சாலைகள், பன்னாட்டு வணிக நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், உணவகங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் பெயர் பலகைகளை தமிழில் அமைக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x