Published : 26 Dec 2020 03:14 AM
Last Updated : 26 Dec 2020 03:14 AM

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, திருப்பூரில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருப்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. திருப்பூர் குமார் நகரில் உள்ள புனித சூசையப்பர் ஆலயம், நீதிமன்ற வீதியில் உள்ளடி.இ.எல்.சி. அருள்நாதர் ஆலயம், குமார் நகரில் உள்ள தூயபவுல் ஆலயம், ஆஷர் நகரில் உள்ள தூய லூக்கா ஆலயம், நல்லூரில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயம், குமரன் சாலை சி.எஸ்.ஐ. ஆலயம் உட்பட பல்வேறு பகுதிகளிலுள்ள தேவாலயங்களில், நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை பிரார்த்தனைகள், வழிபாடுகள் நடைபெற்றன. கிறிஸ்து பிறப்பு பாடலில் தொடங்கி, திருப்பலி ஆராதனை, நற்செய்தி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளும், சிறப்பு ஆராதனை வழிபாடுகளும் நேற்றுநடைபெற்றன. ஏராளமான கிறிஸ்தவ மக்கள் புத்தாடைகள் அணிந்து குடும்பத்துடன் கலந்துகொண்டனர். ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x