Published : 14 Dec 2020 03:15 AM
Last Updated : 14 Dec 2020 03:15 AM

திண்டுக்கல்லில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் சேர்க்கை, திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்.,பள்ளி மற்றும் எம்.எஸ்.பி. பள்ளிகளில் நடந்த சிறப்பு முகாமை ஆட்சியர் மு.விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அவர் கூறுகையில், வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, சிறப்பு முகாம் களில் பெறப்படும் விண்ணப்பங்கள், பரிசீலனை செய்யப்படும். தகுதியிருப்பின் இறுதி வாக்காளர் பட்டியல் 2021 ஜனவரி 20-ல் வெளியாகும்போது பெயர் இடம்பெறும், என்றார். மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன் உடன்் இருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x