Published : 07 Dec 2020 03:15 AM
Last Updated : 07 Dec 2020 03:15 AM

அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி ஆகியவற்றின் சார்பில் மதவெறி, சாதிவெறிக்கு எதிராக மக்கள் ஒற்றுமை உறுதியேற்பு நிகழ்ச்சி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதேபோல, கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், விசிக மண்டலச் செயலாளர் விவேகானந்தன், நீலப்புலிகள் இயக்கத் தலைவர் இளங்கோவன், தி.க தலைவர் கு.நிம்மதி உட்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் மாலை அணிவித்து, உறுதிமொழியேற்றனர்.

தஞ்சாவூரில் ரயிலடி முன்பு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படத்துக்கு ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட பொருளாளர் கா.பிச்சைக்கண்ணு உள்ளிட்டோரும், அமமுக சார் பில் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் உள்ளிட்டோரும், பாஜக சார்பில் நகரச் செயலாளர் ரகுராமன் உள்ளிட்டோரும் மாலை அணி வித்தனர்.

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் அமைப்பாளர் ராம.சேயோன் தலைமையில், அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

மயிலாடுதுறையை அடுத்த சித்தர்காடு ஊராட்சியில் நீலப்புலி கள் இயக்கம் சார்பில் கபிலன் தலைமையில் அம்பேத்கர் படத்துக்கு மலர் தூவி, மரியாதை செலுத்தினர்.

காரைக்கால் ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு, புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், ஆட்சியர் அர்ஜூன் சர்மா, எம்எல்ஏக்கள் கீதா ஆனந்தன், கே.ஏ.யு.அசனா, பி.ஆர்.என்.திருமுருகன், திமுக அமைப்பாளர் ஏ.எம்.எச்.நாஜிம் உள்ளிட்டோர் நேற்று மாலை அணிவித்தனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்பேத்கர் சிலைக்கு, மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் என்.நடராஜன் தலைமையில் அதிமுகவினரும், திமுக சார்பில் மாவட்டப் பொறுப்பாளர்கள் தியாகராஜன், வைரமணி ஆகியோர் தலைமையில் எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார் உள்ளிட்டோரும், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஜவஹர், விசிக மாநில நிர்வாகி பிரபாகரன் உள்ளிட்டோரும் நேற்று மாலை அணிவித்தனர்.

இதேபோல, திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ தலைமையில், கீழரண் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு முன்னாள் எம்எல்ஏ கேஎன்.சேகரன் உள்ளிட்டோர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு, திமுக எம்எல்ஏ பெரியண்ணன் அரசு, தேமுதிக மாவட்டச் செயலாளர் செல்வின்ராஜ், விசிக மாநில துணைச் செயலாளர் தெ.கலைமுரசு, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.என்.ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினர் டி.சலோமி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

ஆதித்தமிழர் பேரவை சார்பில் கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் கரிகாலன் தலைமையில் தோகைமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்பேத்கர் படத்துக்கு மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மலர் தூவி, மரியாதை செலுத்தினார். விசிக சார்பில் ஒன்றியச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்பேத்கர் படத்துக்கு குளித்தலை எம்எல்ஏ ராமர் மாலை அணிவித்தார்.

அரியலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு, அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்தி ரன், பாமக மாநில துணைத் தலைவர் சின்னத்துரை, விசிக மாவட்டச் செயலாளர் மு.செல்வ நம்பி, தேமுதிக மாவட்டச் செய லாளர் ராம.ஜெயவேல் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி னர்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் ப.காமராசு தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதேபோல, பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x