Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM

பூட்டை உடைத்து பணம் திருட்டு

விருதுநகர் மாவட்டம் சந்திரகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி (40). கணவரை பிரிந்த இவர், இரண்டு மகள்களுடன் திருப்பூர் முத்தனம்பாளையம் பகவதி அம்மன் நகரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தனது மூத்த மகளுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் திரும்பியபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.80 ஆயிரம், அரை பவுன் தங்க நகை, வெள்ளிக் கொலுசு ஆகியவை திருடுபோயிருந்தது. இதுகுறித்து சுப்புலட்சுமி அளித்த புகாரின்பேரில், மாநகர ஊரக காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x