Published : 02 Dec 2020 03:16 AM
Last Updated : 02 Dec 2020 03:16 AM

சாணார்பட்டி அருகே செங்கல் சூளை உரிமையாளர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

திண்டுக்கல் அருகே செங்கல் சூளை உரிமையாளர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே எல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். செங்கல் சூளை நடத்திவருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் சிலர் இவரது வீட்டின் ஜன்னலில் நாட்டு வெடிகுண்டை வீசினர். வெடிச்சத்தம் கேட்டு மனைவி, மகளுடன் தூங்கிக் கொண்டிருந்த முருகேசன், அதிர்ச்சியடைந்து வந்து பார்த்தார். அப்போது, ஜன்னல் கண்ணாடி உடைந்திருந்தது. இதுகுறித்து அவர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

சாணார்பட்டி போலீஸார் வந்து சோதனை நடத்தி, வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் வெடிக்காமல் இருந்த நாட்டு வெடிகுண்டைக் கைப்பற்றினர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக சிலர் நாட்டு வெடிகுண்டை வீசிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாாித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x