Published : 01 Dec 2020 03:16 AM
Last Updated : 01 Dec 2020 03:16 AM

மீண்டும் கே.பழனிசாமி தமிழக முதல்வராவார் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் நம்பிக்கை

திருப்பூர்/பொள்ளாச்சி

மீண்டும் கே.பழனிசாமி தமிழக முதல்வராவார் என, திருப்பூரில் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் தெரிவித்தார்.

அதிமுகவின் திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பிச்சம்பாளையம்புதூரில் கட்சியினர் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: திருப்பூருக்கு ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த சந்தை வளாகம், இரண்டு பெரிய பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

பல்வேறு தரப்பினரும் வசிக்கும் திருப்பூர் மாநகருக்கு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.என்.விஜயகுமாரும், சு.குணசேகரனும், தமிழக முதல்வரிடம் பேசி, மேட்டுப்பாளையம் மற்றும் பவானி ஆற்றுநீரை கொண்டு வந்துள்ளனர். தமிழகத்தில் ஜெயலலிதா அமர்ந்த முதல்வர் இருக்கையில், மு.க.ஸ்டாலினை அமர வைக்கக்கூடாது. தமிழகத்துக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்க, வரும் தேர்தலில் தமிழக முதல்வராக பழனிசாமியை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராவார். கட்சியின் நம்பிக்கைக்கு உரியவர்களை பூத் கமிட்டி உறுப்பினர்களாக நியமிப்பது உட்பட, தேர்தல் பணிகளை இன்னும் ஒருவார காலத்துக்குள் செய்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 27 மற்றும் 29-வது வார்டுகளில் அன்னை கஸ்தூரிபாய் வீதி நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து மனுக்களை பெற்றுக்கொண்டனர். அதன் பின்னர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கடந்த 4 ஆண்டுகளாக முதல்வர் எளிய முறையில் நடந்து மக்களின் அனுமானத்தைப்பெற்று மக்களின் முதல்வராக விளங்கி வருகிறார். யாருடைய அரசியல் வருகையாலும் அதிமுக அச்சம் கொள்ளாது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x