Published : 30 Nov 2020 03:10 AM
Last Updated : 30 Nov 2020 03:10 AM

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கே வெற்றி தமாகா இளைஞரணித் தலைவர் நம்பிக்கை

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரும் வெற்றிபெறும் என தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜா தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமாகா அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும். திமுக ஒருபுறம் தங்களது பிரச்சாரத்தை தொடங்கினாலும்கூட, ஒருபோதும் தமிழக மக்கள் அவர்களையும், அவர்களது கூட்டணிக் கட்சியினரையும் ஏற்கமாட்டார்கள்.

எங்களது கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான கே.பழனிசாமி மீண்டும் முதல்வராவார். அதற்கு அடித்தளமாக தமாகாவின்ஆண்டு விழா நிகழ்ச்சிகள் அமையும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்7-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, திருப்பூரில் அக்கட்சியினர் சார்பில் இருசக்கர வாகன பேரணி, வார்டுகள் வாரியாக கொடியேற்றும் நிகழ்ச்சி, ஏழை மற்றும் எளியோருக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x