Published : 29 Nov 2020 03:12 AM
Last Updated : 29 Nov 2020 03:12 AM

கொடைரோடு அருகே ஆட்டோக்கள் மீது வேன், கார் மோதி 2 பெண்கள் உயிரிழப்பு

கொடைரோடு அருகே 2 ஆட்டோக்கள் மீது மினி வேன், கார் அடுத்தடுத்து மோதியதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் காமலாபுரம் அருகே சக்கையநாயக்கனூரைச் சேர்ந்த பெண்கள் 13 பேர் நேற்று காலை ஜல்லிபட்டி அருகே தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணிக்குச் சென்றனர்.

இவர்கள் நேற்று மாலை பணி முடிந்து 2 ஆட்டோக்களில் ஊருக்குத் திரும்பி வந்து கொண்டி ருந்தனர்.

கொடை ரோடு அருகே ஜல்லிப்பட்டி பிரிவில் நான்குவழிச் சாலையில் ஒருபுறத்தில் உள்ள சாலையிலிருந்து மற்றொரு புறத்தின் சாலைக்குத் திரும்ப வளைவில் காத்திருந்தனர். அப்போது திண்டுக்கல்லில்இருந்து மதுரை நோக்கிச் சென்ற மினி வேன் ஆட்டோக்களின் பின்புறம் மோதியது.

இதில் ஆட்டோக்கள் எதிர்புறச் சாலைக்கு சென்றதில் திண்டுக்கல் நோக்கி வந்த கார் ஆட்டோக்கள் மீது மோதியது. இதில் 2 ஆட்டோக்களும் கவிழ்ந்தன. ஆட்டோவில் பயணம் செய்த சரஸ்வதி(55), சுப்புலட்சுமி(38) ஆகியோர் உயிரிழந்தனர். ஆட்டோ ஓட்டுநர்கள் ராஜா(31), ஜெயபால்(32) உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x