Published : 25 Nov 2020 03:14 AM
Last Updated : 25 Nov 2020 03:14 AM

சிறுவனை தாக்கிய இருவர் மீது வழக்கு

திருப்பூர் மாவட்டம் சேயூர் காவல் எல்லைக்கு உட்பட்ட சின்ன ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 19 வயது சிறுவன், பெரிய ஒட்டர்பாளையம் பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக அதே நிறுவனத்தில் வேலை செய்யும் இளம்பெண் ஒருவருக்கு வாட்ஸ்-அப் மூலமாக சிறுவன் குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார்.

இந்த விவகாரம், பின்னலாடை உற்பத்தி நிறுவன உரிமையாளர் மயில்சாமிக்கு தெரியவந்ததையடுத்து, சிறுவனை எச்சரித்துள்ளார். ஆனால், அதை பொருட்படுத்தாமல் மீண்டும் அப்பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளான்.

இதனால், கடந்த 21-ம் தேதி மயில்சாமி மற்றும் அவரது நண்பர்பழனிசாமி உள்ளிட்டோர், நிறுவனத்தில் வைத்து சிறுவனை தாக்கி துன்புறுத்தியதாக தெரிகிறது. காயமடைந்த சிறுவன், அவிநாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக சிறுவன் அளித்த புகாரின்பேரில், போக்ஸோ பிரிவின் கீழ் மயில்சாமி, பழனிசாமி மீது சேவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x