Published : 24 Nov 2020 03:14 AM
Last Updated : 24 Nov 2020 03:14 AM

பரமசிவம்பாளையத்தில் பாலம் அமைக்க கோரிக்கை

பொங்குபாளையம் கிளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் எஸ்.அப்புசாமி, திருப்பூர் வடக்கு நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளரிடம் நேற்று அளித்த மனுவில், "பொங்குபாளையம் ஊராட்சி சிவகிரி தண்ணீர் பந்தலில் இருந்து கோவை - சேலம் புறவழிச்சாலைக்கு செல்லும் சாலையில், பரமசிவம்பாளையம் மடையக்காடு கிழக்குத் தோட்டம் சந்திப்புமிகவும் தாழ்வான பகுதியாக உள்ளது. இதனால், மழைக் காலத்தில் சாலையில் 4 அடிக்கு மேல் தண்ணீர் தேங்குகிறது. எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க உயர்மட்ட பாலம் மற்றும் சாலை தடுப்புச் சுவர் அமைத்து தர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x