Published : 14 Nov 2020 03:13 AM
Last Updated : 14 Nov 2020 03:13 AM

திமுகவில் இணைந்த திருப்பூர் தேமுதிகவினர்

திருப்பூர் மாவட்ட தேமுதிக துணைச் செயலாளராக, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அ.கோவிந்தராஜ் இருந்து வந்தார்.

கடந்த முறை தேமுதிக சார்பில் திருப்பூர் மாநகராட்சி உறுப்பினராகவும் இருந்து வந்தார். இந்நிலையில், இவர்உட்பட தேமுதிக பகுதி கழக பொருளாளர் சுப்பிரமணியம், துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், வட்டக் கழக செயலாளர் சூர்யா மோகன் உள்ளிட்டோர், திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பெ.சாமிநாதன், திருப்பூர் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் இல.பத்மநாபன் ஆகியோர் முன்னிலையில் திருப்பூரிலுள்ள கலைஞர் அறிவாலயத்தில் வைத்து திமுகவில் இணைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x