Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM

இடுவாய் ஊராட்சியில் கரோனா தொற்று ஆய்வு முகாம்

இடுவாய் ஊராட்சி சீரங்க கவுண்டன்பாளையம், பாரதிபுரம், வள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக கரோனா தொற்று ஆய்வு முகாம் நடைபெற்றது.

தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் மேற்கண்ட பகுதிகளில் நடைபெற்ற முகாமில், ஊர் பொதுமக்களுக்கும், தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தில் பணிபுரியும்தினக் கூலி தொழிலாளர்களுக்கும் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனாவை கண்டறியும் (ஸ்வாப்) பரிசோதனை செய்யப்பட்டது. இடுவாய் ஊராட்சி மன்றத்தலைவர் கணேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சு.பரமசிவம் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் சிவநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x