Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM

தாழ்வாக சென்ற மின் கம்பிகள் சீரமைப்பு

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர்.எஸ்.புதூர் குடியிருப்புப் பகுதியில் இரண்டு மின் கம்பங்களுக்கு இடையே செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக இருந்தன. பொதுமக்களுக்கு ஆபத்து நேரும்முன்பு மின்வாரிய அதிகாரிகள் உரிய முறையில் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இப்பிரச்சினை தொடர்பான செய்தி ‘இந்து தமிழ்’ நாளிதழில் நேற்று (நவ.11) வெளியானது. உடனடியாக ஊத்துக்குளி உட்கோட்ட மின்வாரிய அதிகாரிகள், அப்பகுதிக்கு சென்று குடியிருப்புப் பகுதியில் ஆபத்தான வகையில் சென்ற மின்கம்பிகளை சீரமைத்து, மின்கம்பங்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x