Published : 02 Nov 2020 03:13 AM
Last Updated : 02 Nov 2020 03:13 AM

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் 4-ம் தேதி திருப்பூர் வருகை

திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

வரும் 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், தமிழக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம், சமூக, சுற்றுச்சூழல் ஆகியவற்றை கருத்தில்கொண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்தந்த மாவட்டங்களில் இடம்பெற வேண்டிய பொது அம்சங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள பொது பிரச்சினைகளை எழுத்துப்பூர்வமாக மனுக்களாக பெற்று வருகின்றனர்.

அதன்படி திமுக பொருளாளரும், மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு தலைமையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் வரும் 4-ம் தேதி காலை 10 முதல் பகல் 12 மணி வரை திருப்பூர் அவிநாசி சாலை திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் மனுக்களை பெற்றுக் கொள்கின்றனர். இதில் திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுகவுக்கு உட்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியினர், அனைத்து முன்னாள், தற்போதைய மக்கள் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள், விவசாயிகள், மாணவ, மாணவிகள், வணிகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x