Published : 31 Oct 2020 03:13 AM
Last Updated : 31 Oct 2020 03:13 AM

சி க்கண்ணா அரசு கல்லூரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்பு

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை அனைத்து கல்லூரி களிலும் அமல்படுத்த வேண்டு மென்ற கல்லூரி கல்வித் துறையின் அறிவுரைப்படி, திருப்பூர்சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் என்.எஸ்.எஸ். அலகு - 2 சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குமுதல்வர் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன், பொதுமக்களின் நலனுக்காகப் பணியாற்றுவேன், ஊழல் தொடர்பான நிகழ்வை உரிய அதிகாரஅமைப்புக்கு தெரியப்படுத்துவேன் என்று மாணவர்களும், பேராசிரியர்களும் உறுதி ஏற்றனர்.

முன்னதாக, எஸ்.எஸ்.எ.எஸ். அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். மாணவ செயலர் சந்தீப் மேற்பார்வையில் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பேராசிரியர்கள் விநாயகமூர்த்தி, புஷ்பலதா, அமிர்தவாணி உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x