Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM

7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டால் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில முடியும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

திருப்பூர்

பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருப்பூர்,ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 571 தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கும்விழா, திருப்பூர் அருகே கணக்கம்பாளையத்தில் நடைபெற்றது.

இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது, "தனியார் பள்ளிகளுக்கு இந்தாண்டு முதல் 2 ஆண்டுகளுக்கான தொடர்அங்கீகார ஆணை வழங்கப்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில், முதல்வர் கொண்டுவந்துள்ள 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டால் 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில முடியும்.

பள்ளிகள் திறப்பது குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பார்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x