Published : 16 Dec 2021 03:07 AM
Last Updated : 16 Dec 2021 03:07 AM

அறுந்து கிடந்த மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு : காப்பாற்ற முயன்ற மனைவி படுகாயம்

மதுரை

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே டி.வலையங்குளத்தில் மின்சார வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தார். அவரது மனைவியும் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார்.

கள்ளிக்குடி அருகிலுள்ள டி. வலையங்குளத்தைச் சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன் (37). அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு விவசாயி கதிர்வேல். இவருக்கு அப்பகுதியில் நிலம் உள்ளது. இதன் அருகே கிருஷ்ணனுக்கும் விவசாய நிலம் இருக்கிறது.

கதிர்வேல் தனது நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார். காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்ப டுத்தாமல் இருக்க நிலத்தை சுற்றிலும் மின் வேலி அமைத் திருந்தார். இந்நிலையில் கிருஷ் ணனும், அவரது மனைவி அக்கம் மாளும் (31) நேற்று காலை வயலுக்கு சென்றனர். அப்போது வயலுக்கு அருகே தாழ்வான பகுதியில் தேங்கி இருந்த தண்ணீரில் காலை வைத்தபோது கிருஷ்ணன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரை காப்பாற்ற முயன்ற அக்கம்மாள் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் காயமடைந்த அவரை, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கதிர்வேல் அமைத்திருந்த மின்வேலியின் கம்பி தண்ணீரில் அறுந்து கிடந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது ஆய்வில் தெரியவந்தது.

இதுகுறித்து புகாரின்பேரில், கதிர்வேலை பிடித்து கள்ளிக்குடி போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x