Published : 15 Dec 2021 03:08 AM
Last Updated : 15 Dec 2021 03:08 AM

மதுரை யாதவா மகளிர் கல்லூரியில் - டிச.18-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் :

மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் டிச.18 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை திருப்பாலையில் உள்ள யாதவா மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் டிவிஎஸ், ஹெச்சிஎல், எலீஸியம் குரூப் ஆப் கம்பெனிஸ், ஜெகே பென்னர், ஹையாடெக் சொல்யூஷன்ஸ் பிவிடி லிட். உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாமில் பங்கேற்க விருப் பமுள்ள தனியார் நிறுவனங்கள் employmentprivatejobs@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு, முகாமில் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

இம்முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரையிலும், டிப்ளமோ மற்றும் ஐடிஐ முடித்த வேலைநாடுநர் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x