Published : 14 Dec 2021 03:08 AM
Last Updated : 14 Dec 2021 03:08 AM

மதுரையில் டிச.22-ல் தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் :

மதுரை தெற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவர் அலுவலக உதவி இயக்குநர் ஜெ.பிரதீப்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மதுரை பீபி குளத்திலுள்ள தெற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகத்தில் மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் டிச.22-ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. தபால் சேவை தொடர்பான புகார் மனுக்களை டிச.20-ம் தேதிக்குள் அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும். தனியார் கூரியரில் அனுப்பும் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x