Published : 09 Dec 2021 03:08 AM
Last Updated : 09 Dec 2021 03:08 AM

சிறுமிக்கு திருமணம் 4 பேர் மீது வழக்கு :

மதுரை மாவட்டம், மாங்குளம் பகுதியில் சிறுமி ஒருவருக்கு கடந்த 6-ம் தேதி திருமணம் நடந்ததாக மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய விரிவாக்கப் பிரிவு அலுவலர் அழகுராணிக்கு தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக அவர் சம்பந்தப்பட்ட கிராமத்தில் விசாரித்தபோது, சிறுமிக்கும், கூலாண்டிபட்டி அருண் (24) என்பவருக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது தெரி யவந்தது. இது தொடர்பாக அழகுராணி ஒத்தக்கடை காவல் நிலையில் புகார் அளித்தார்.

இதன்பேரில் அருண், அ வரது தாயார் பாண்டியம்மாள் மற்றும் உறவினர்கள் செல்வம் (42), அவரது மனைவி பாண்டிச் செல்வி (34) ஆகியோர் மீது காவல் ஆய்வாளர் (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x