Published : 08 Dec 2021 04:09 AM
Last Updated : 08 Dec 2021 04:09 AM

செங்கல் சூளைக்கு கரம்பை, செம்மண் எடுக்க அனுமதி கேட்டு மனு :

மதுரை மாவட்டம், சேடபட்டி ஒன்றிய மார்க்சிஸ்ட் செயலாளர் பெ.ராஜாசங்கர், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் சி.ராமகிருஷ்ணன் மற்றும் அப்பகுதியினர் ஆட்சியர் அனீஷ்சேகரிடம் மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது:

சேடபட்டி ஒன்றியத்தில் எழுமலை, வண்டாரி, மல்லபுரம், சூலப்புரம், துள்ளுக்குட்டிநாயக்கனூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 170-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. கடந்த ஓராண்டாக செங்கல் சூளைக்கு தேவையான கரம்பை, செம்மண் எடுக்க அனுமதி வழங்காததால் செங்கல் சூளைகள் இயங்கவில்லை. இத்தொழிலை நம்பியுள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வருமானமின்றி தவிக்கின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் கண்மாய் பகுதியில் உள்ள கரம்பை மண், செம்மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x