Published : 02 Dec 2021 03:07 AM
Last Updated : 02 Dec 2021 03:07 AM

ரயில்வே பள்ளியில் அறிவியல் பாடம் எடுக்க இந்தி ஆசிரியர் நியமனத்துக்கு எதிர்ப்பு :

மதுரை ரயில்வே காலனியில் அமைந்துள்ள ரயில்வே மேல்நிலைப் பள்ளி பாரம்பரியமிக்கது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் ஏராளமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்த இந்தி மொழி மட்டுமே தெரிந்த ஆசிரியர் ஒருவரை நியமித்துள்ளனர். அவருக்கு தமிழும், ஆங்கிலமும் சரளமாகத் தெரியவில்லை. அவரால் மாணவர்களின் சந்தேகங்களை புரிந்துகொண்டு உரிய விளக்கம் அளிக்க முடியவில்லை என மாணவர் தரப்பில் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே ரயில்வே தொழிலாளர்களின் குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழ், ஆங்கிலம் நன்கு தெரிந்த அறிவியல் ஆசிரியரை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x