Published : 02 Dec 2021 03:07 AM
Last Updated : 02 Dec 2021 03:07 AM

சமையல் எரிவாயு விலை உயர்வு ஹோட்டல்கள் சங்கம் கண்டனம் :

மதுரை: மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பதால் உணவுத்தொழில் நலிவடைந்து வருகிறது என்று மதுரை தமிழ்நாடு ஓட்டல் சங்க இணைச் செயலாளர் குமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: சமையல் எரிவாயு மட்டுமின்றி சமையல் எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் விலையும் அதிகரித்து வருகின்றன. இதனால் உணவுத் தொழில் பாதிக்கப்படுகிறது.

மாதந்தோறும் அதிகரிக்கப்பட்டு வரும் சமையல் காஸ் விலை உயர்வால் உணவுத் தொழிலை நடத்துவோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வர்த்தக சமையல் காஸ் சிலிண்டர் 101 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x