Published : 29 Nov 2021 03:07 AM
Last Updated : 29 Nov 2021 03:07 AM

போர்க்கால அடிப்படையில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க பாஜ வலியுறுத்தல் :

மதுரை மாநகர் மாவட்ட பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய மாவட்ட தலைவர் பி.சரவணன்.

மதுரை: மதுரை மாநகர் மாவட்ட பாஜ செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் பி.சரவணன் தலைமையில் நடந்தது. மாநில துணைத் தலைவர் ஏ.ஆர்.மகாலெட்சுமி, மாநில அரசு தொடர்புப் பிரிவு தலைவர் ராஜரத்தினம், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் சசிராமன், சீனிவாசன், மாவட்ட பார்வையாளர் கதலி நரசிங்கப்பெருமாள், துணைத் தலைவர் ஹரிகரன், கார்த்திக்பிரபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் 121 கோடி கரோனா தடுப்பூசி வழங்கிய பிரதமர் மோடிக்கும், புதிதாகப் பொறுப்பேற்று துடிப்போடு செயல்படும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் பாராட்டுத் தெரிவிப்பது, முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் சிலை அமைப்பது, பெரியார் பேருந்து நிலைய திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடியை தமிழக அரசு அழைக்க வேண்டும். மழையால் பழுதடைந்த சாலைகளைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x