Published : 28 Nov 2021 03:08 AM
Last Updated : 28 Nov 2021 03:08 AM

மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்று - மதுரை அரசு பள்ளி மாணவர்கள் சாதனை :

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.

இதில் 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மேலூர் அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி 7-ம் வகுப்பு மாணவி அ.சோலையம்மாள் முதலிடம் பெற்றார். அதே பள்ளி யின் 8-ம் வகுப்பு மாணவர் எஸ்.தேவ்நாத் 4-வது இடம் பெற்றார்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை அ.வல்லாளப்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், அ.செட்டியார்பட்டி பள்ளி தலைமை ஆசிரியை மு.மணிமேகலை, ஆசிரியரும், சதுரங்கப் பயிற்சியாளருமான ஞா.செந்தில்குமார் ஆகியோர் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x