10:06:32
புதன், ஏப்ரல் 09 2025
Last Updated : 23 Nov, 2021 03:06 AM
Published : 23 Nov 2021 03:06 AM Last Updated : 23 Nov 2021 03:06 AM
கோவை: கோவையில் இருந்து விமானத்தில் வெளிநாட்டு கரன்சிகளை கடத்த சிலர் முயல்வதாக கோவை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, விமானநிலையத்தில் பயணிகளிடம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு பயணியிடம் ரூ.26.62 லட்சம் மதிப்புள்ள சவுதி அரேபியன் ரியால், அமெரிக்க டாலர், யு.ஏ.இ., தினார் ஆகிய வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன. விசாரணையில், அவர் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கோகுல கோடீஸ்வரன் (27) என்பதும், ஏர் அரேபியா விமானம் மூலம் ஷார்ஜாவுக்கு பணத்தை கடத்த முயன்றதும் தெரியவந்தது
Sign up to receive our newsletter in your inbox every day!
Be the first person to comment
WRITE A COMMENT
Be the first person to comment