Published : 21 Nov 2021 03:07 AM
Last Updated : 21 Nov 2021 03:07 AM
ஈரோடு: தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசிய வழக்கு தொடர்பாக ஈரோடு நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி, தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் சார்பில் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் மணியரசு, கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் சீமான் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் சீமான் உட்பட 3 பேரும் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசியதாக கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை ஈரோடு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஜராவதற்காக சீமான், கொளத்தூர் மணி, மணியரசு ஆகியோர் நேற்று ஈரோடு சம்பத் நகரில் உள்ள நீதிமன்றத்திற்கு வந்தனர்.
பின்னர் வழக்கு விசாரணை வரும் 30-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நீதிமன்றத்துக்கு வெளியே நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் திரண்டதால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT