Published : 20 Nov 2021 03:09 AM
Last Updated : 20 Nov 2021 03:09 AM

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து பெண் மரணம் :

பாளையங்கோட்டை கேடிசி நகரில் மோட்டார் சைக்கிள் டயர் வெடித்து கவிழ்ந்ததில் அய்யம்மாள் (30) உயிரிழந்தார்.

தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த மாரிமுத்து மனைவி அய்யம்மாள். திருநெல்வேலியிலுள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் இருவரும் வந்துவிட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். கேடிசி நகரை தாண்டி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிளின் டயர் வெடித்து நடுரோட்டில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில், மாரிமுத்துவும், அய்யம்மாளும் பலத்த காயமடைந்தனர். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அய்யம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x