Published : 18 Nov 2021 03:07 AM
Last Updated : 18 Nov 2021 03:07 AM
கோவை மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்து மக்கள் கட்சி (தமிழகம்) நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத், கடந்த 7-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி குறித்து பதிவிட்ட கருத்து தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அமைதியை சீர்குலைக்கும் வகையில் வேண்டுமென்றே அவமதிப்பு செய்தல், இரு தரப்பினரிடையே மோதலை தூண்டுதல் ஆகிய இரு பிரிவுக ளின் கீழ் அர்ஜூன் சம்பத் மீது கடைவீதி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT