Published : 18 Nov 2021 03:08 AM
Last Updated : 18 Nov 2021 03:08 AM
புதுச்சேரி காவல்துறை டிஜிபி யாக பணியாற்றி வருபவர் ரன்வீர்சிங் கிருஷ்ணியா. இவருக்குசில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக மருத்துவர்கள் பரிந்துரையின்பேரில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் டிஜிபி உடல்நலம் குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கேட்டறிந்தார்.
இது குறித்து ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள தகவலில், ‘‘உடல் நலக்குறைவு காரணமாக சென்னை, தரமணி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல்துறை டிஜிபி ரன்வீர் சிங் கிருஷ்ணியா உடல் நலம் குறித்து,
அவருக்கு சிகிச்சை அளித்து வரும் சிறப்பு மருத்துவர் டாக்டர் ரூபேஷ் குமாரிடம், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொலைபேசி வழியாக விசாரித்து அறிந்தார். டிஜிபி உடல் நலம் சீராக இருப்பதாகவும் அவர் நாளை(இன்று) பொது சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படுவார் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார். டிஜிபி விரைந்து நலம் பெற்று பணிகளைத் தொடர துணைநிலை ஆளுநர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்’’இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT