Published : 17 Nov 2021 03:08 AM
Last Updated : 17 Nov 2021 03:08 AM

பாஜக சார்பில் போராட்டம் : நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ அறிவிப்பு

திருநெல்வேலி

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், பாஜக மாநில துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் கூறிய தாவது:

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளன. திருநெல்வேலி டவுன், பேட்டை, பழைய பேட்டை, ராமையன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து காணப்படுவதால் வியாபாரிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளா கின்றனர். தற்காலிக சீரமைப்பு பணிகள் கூட செய்யப்படவில்லை. இதனை கண்டித்து பாஜக சார்பில் மக்களைத் திரட்டி டிசம்பர் 7-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.

அதிமுக உட்பட அனைத்துக் கட்சியினரையும் போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுப்போம். மக்களின் கோரிக்கையை அரசு விரைந்து நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்துக்குச் சென்று, சாலைகளை சீரமைக்கக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x