தாய் துக்க நிகழ்வுக்கு வந்த மகள் விபத்தில் உயிரிழப்பு :

தாய் துக்க நிகழ்வுக்கு வந்த மகள் விபத்தில் உயிரிழப்பு :

Published on

கோவையில் தாய் துக்க நிகழ்வுக்காக வந்த மகள் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் சோடிதா(42). இவரது மகன் ராகுல் (23). சோடிதாவின் தாய் கோவையில் வசித்து வந்த நிலையில், கடந்தவாரம் உயிரிழந்தார். இந்த நிலையில் தாய் துக்க நிகழ்வுக்காக நேற்று முன் தினம் இரவு சோடிதா மற்றும் அவரது மகன் ராகுல் ஆகியோர் சென்னையில் இருந்து காரில் வந்தனர்.கோவை- சேலம் தேசியநெடுஞ்சாலையில் பெருமாநல்லூர்ஈட்டிவீரம்பாளையம் அருகே நேற்று அதிகாலை கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது.

விபத்தில் காரின் முன் பக்கம் கடும் சேதம் அடைந்தது. இதில் தாய், மகன் இருவரும் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் அப்பகுதியினர் மீட்டு, அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். செல்லும் வழியில், சோடிதா உயிரிழந்தார். ராகுலுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக பெருமாநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in