Published : 12 Nov 2021 03:17 AM
Last Updated : 12 Nov 2021 03:17 AM

வேய்ந்தான்குளம் சீரமைப்பு பணி :

திருநெல்வேலி

திருநெல்வேலி நீர் வளம் திட்டத்தில் தனியார் பங்களிப்புடன், திருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள வேய்ந்தான்குளம் சீரமைக்கும் பணி மற்றும் வரத்து கால்வாய் சீரமைக்க வேண்டிய பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலி துணை ஆட்சியர் (பயிற்சி) மகாலெட்சுமி, வட்டாட்சியர் செல்வம், பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர் தங்கராஜ், நம் தாமிரபரணி ஒருங்கிணைப்பாளர் சாமி‌ நல்லபெருமாள், மாநகர நீர்நிலை பாதுகாப்பு கமிட்டி தலைவர் முத்துசாமி, வேய்ந்தான் குளம் பாதுகாப்பு கமிட்டி தலைவர் ரமேஷ் ராஜா, செயலாளர் லாசர், பொறியாளர்கள் ராமகிருஷ்ணன், சுடலை மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x