Published : 09 Nov 2021 03:10 AM
Last Updated : 09 Nov 2021 03:10 AM

அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் :

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில் புதிதாக இளங்கலை கணினி அறிவியல் (பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ்) பாடப்பிரிவு தொடங்க அழகப்பா பல்கலைக்கழகத்தால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இப்பாடப்பிரிவுக்கு நாளை (நவ.10) முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. தகுதியுள்ள மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை கல்லூரியில் பெற்று தகுந்த ஆவணங்களுடன் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என கல் லூரி முதல்வர் கா.பு.கணேசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x