Published : 31 Oct 2021 03:10 AM
Last Updated : 31 Oct 2021 03:10 AM
தீபாவளியையொட்டி புதுச்சேரியில் முதி யோர், விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் மாத தொடக்கமான முதல் தேதியன்றே உதவித்தொகையை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட் டுள்ளது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்துதலின்படி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் இத்துறை மூலமாக மாதந்தோறும் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், விதவை,முதிர்கன்னி, திருநங்கைகள் கணவரால் கைவிடப்பட்டவர் ஆகியோருக்கு வங்கிக்கணக்கில் உதவி தொகை செலுத்தப்பட் டுள்ளது.
மேலும், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூன்று மாதத்திற்கான இலவச அரிசிக்கு நிகரான பணம் தலா ரூ.1,350 வீதம் ரூ.2.75கோடி மற்றும் மாற்றுத் திறனா ளிகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச வேட்டி சேலைக்கு நிகரான பணம் தலா ரூ. 500 வீதமாக 18 வயது பூர்த்தி அடைந்த அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் ரூ.81.81.லட்சம் பயனாளிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
பயனாளிகள் நாளை (நவ.1) முதல் வங்கி யில் இருந்து இந்த உதவித் தொகையை எடுத்து பயன் பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT