Published : 17 Oct 2021 03:10 AM
Last Updated : 17 Oct 2021 03:10 AM

தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு - இ. சேவை மையங்களில் அக்.22 வரை விண்ணப்பிக்கலாம் :

திருநெல்வேலி

திருநெல்வேலி ஆட்சியர் விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற வரும் 22-ம் தேதி வரை இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும்போது, கடை அமைவிடத்துக்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டிடத்துக்கான புளு பிரிண்ட் வரைபடம் (6 நகல்), கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம், வாடகை கட்டிடமாக இருப்பின் வாடகை ஒப்பந்தப் பத்திரம் மற்றும் உரிமத்தைக் காட்டும் ஆவணம், உரிமத்துக்கான கட்டணம் ரூ.500-ஐ அரசுக் கணக்கில் செலுத்தியமைக்கான அசல் சலான், இருப்பிட ஆதாரம் (ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை), வரி ரசீது, புகைப்படம் 2 (பாஸ்போர்ட் சைஸ்) ஆகியவற்றை இணைக்க வேண்டும். விண்ணப்பங்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டு விசாரணை முடிவு பெற்றவுடன், ஆன்லைன் மூலமாகவே தங்களுடைய மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விவரத்துடன், தற்காலிக உரிமத்தின் ஆணையை தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இ-சேவை மையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்யலாம்.

உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப் பட்டால் சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x