Published : 05 Oct 2021 03:14 AM
Last Updated : 05 Oct 2021 03:14 AM

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு - காவல்துறை கொடி அணிவகுப்பு :

திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் நேற்று காவல்துறை கொடி அணிவகுப்பு நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சிதேர்தல் நாளை நடைபெறவுள்ளநிலையில் பலத்த பாதுகாப்புஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 8 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் இங்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பகுதிகளில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் உத்தரவின்பேரில் காவல்துறை கொடிஅணிவகுப்பு நேற்று நடத்தப்பட்டது.

முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பதற்றமான பகுதிகளில் நடைபெற்ற கொடி அணிவகுப்புக்கு கூடுதல் காவல்கண்காணிப்பாளர் மாரிராஜன் தலைமை வகித்தார். முன்னீர்பள்ளம், மருதம்நகர், முல்லைநகர் பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இதில் துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் உட்பட 50 பேர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x