Published : 02 Oct 2021 06:42 AM
Last Updated : 02 Oct 2021 06:42 AM

மாவட்ட கூடைப்பந்து அணிக்கு - நெல்லை கல்லூரி மாணவர்கள் தேர்வு :

திருநெல்வேலி மாவட்ட கூடைப்பந்து அணிக்கு பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரி மாணவர்கள் 3 பேரும், மாணவி ஒருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சார்பில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட கூடைப்பந்து அணிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு மதிதா இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரி மாணவர்கள் எஸ்.பெனையா, எம்.இசக்கிமுத்து, எம். இசக்கிராஜா ஆகியோர் ஆண்கள் அணிக்காகவும், மாணவி எல்.எம். நதியா பெண்கள் அணிக்காகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாணவ, மாணவியரையும், பயிற்சியாளர்கள் சரவண முத்துக்குமார், கிருஷ்ணபிரபு, கல்லூரி உடற்கல்வி இயக்குநர் பீட்டர் மைக்கேல்ராஜ், உடற்கல்வி ஆசிரியர் அஜீத் ஆகியோரையும் கல்லூரி அதிபர் அருட்தந்தை ஹென்றி ஜெரோம், செயலர் அருட்தந்தை அல்போன்ஸ் மாணிக்கம், முதல்வர் அருட்தந்தை மரியதாஸ் ஆகியோர் பாராட்டினர்.

18 வயதுக்கு உட்பட்ட கூடைப்பந்து அணிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு மதிதா இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x