Published : 29 Sep 2021 03:22 AM
Last Updated : 29 Sep 2021 03:22 AM

நெல்லையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை :

திருநெல்வேலி மாவட்டத்தில் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக 8.25 லட்சம் வாக்குச் சீட்டுகள் இருப்பில் உள்ள நிலையில், கூடுதலாக 1.61 லட்சம் வாக்குச் சீட்டுகள் சென்னையிலிருந்து திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று கொண்டுவரப்பட்டன. இவற்றை ஆட்சியர் வே.விஷ்ணு உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை

திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பயிற்சியில் க லந்துகொள்வதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியில் கலந்துகொள்ள ஏதுவாக இன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் (சிபிஎஸ்இ பள்ளிகள் நீங்கலாக) விடுமுறை அளிக்கப்படுகிறது.

பாஜக தலைவர் பிரச்சாரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் களை ஆதரித்து அக் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x