Published : 28 Sep 2021 03:21 AM
Last Updated : 28 Sep 2021 03:21 AM

கொடுமுடியாறு அணையில் 35 மி.மீ. மழை; குற்றாலம் அருவியில் ஆர்ப்பரிப்பு :

திருநெல்வேலி மாவட்டம் கொடுமுடியாறு அணைப்பகுதியில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 35 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதுபோல பாபநாசத்தில் 10 மி.மீ., சேர்வலாறில் 6 மி.மீ., ராதாபுரத்தில் 5 மி.மீ. மழை பெய்திருந்தது. 143 அடி உச்ச நீர்மட்டம்கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம்79.75 அடியாக இருந்தது. அணைக்குவிநாடிக்கு 1,904 கனஅடி தண்ணீர்வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 609 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடிஉச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறுஅணை நீர்மட்டம் 62.90 அடியாகஇருந்தது. அணைக்கு விநாடிக்கு 15 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வந்தது. சுட்டெரித்த வெயிலால் மக்கள்அவதிப்பட்டனர். அனல் காற்று வீசியது.தென்மேற்கு பருவமழை நிறைவடையும் காலகட்டத்தில் கடந்த 2 நாட்களாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் முதல் பலத்த காற்று வீசுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மழைபெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணையில் 45 மி.மீ. மழை பதிவானது. ஆய்க்குடியில் 20 மி.மீ., குண்டாறு அணையில் 18 மி.மீ., தென்காசியில் 10.40 மி.மீ., கருப்பாநதி அணையில் 8 மி.மீ., செங்கோட்டையில் 7 மி.மீ. மழை பதிவானது.

குண்டாறு அணை தொடர்ந்து முழுகொள்ளளவில் உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 64 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 61 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 53.48 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 122 அடியாகவும் இருந்தது. மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x