Published : 21 Sep 2021 03:19 AM
Last Updated : 21 Sep 2021 03:19 AM
ஈரோட்டில் கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஆரஞ்ச் பைன் லைப் ஹவுசிங் நிறுவனம், 500- க்கும் மேற்பட்ட வீட்டுமனை மற்றும் புதிய வீடுகளை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத்தின் சார்பில், பெருந்துறை கும்மாக்காளிபாளையத்தில் அமிர்தா கார்டன் லே அவுட்டில் வீட்டுமனை விற்பனை தொடக்க விழா நடந்தது.
விழாவில், தனியார் தொலைக்காட்சித்தொடர் நடிகை தனம் மற்றும் நடிகர் மூர்த்தி ஆகியோர் பங்கேற்று வீட்டுமனை விற்பனையைத் தொடங்கி வைத்தனர். அமிர்தா கார்டன் உரிமையாளர் கே.செந்தில்குமார், பார்த்திபன் மற்றும் ஆரஞ்ச் பைன் லைப் ஹவுசிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வி.வி. கிருஷ்ணசாமி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர். நிகழ்வில், புதிய வீட்டுமனை வாங்க விரும்பிய பொதுமக்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT