Published : 14 Sep 2021 03:14 AM
Last Updated : 14 Sep 2021 03:14 AM

பட்டாசு கடை உரிமம் விண்ணப்பிக்க செப்.30 கடைசி நாள் :

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச.விசாகனின் செய்திக்குறிப்பு:

தீபாவளிக்கு பட்டாசு சில்லறை விற்பனைக்கான தற்காலிக உரிமங்கள் உரிய அலுவலர்களால் கள ஆய்வு செய்து பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பாக உரிமம் வழங்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தற்காலிக உரிமத் துக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க இணைய வழி தகவு உருவாக்கப்பட்டுள்ளது. வணிகர்கள் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணைய வழியில் இ-சேவை மையம் மூலமாக செப். 30-க் குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x